Skip to main content

Posts

பெண் குழந்தை

Recent posts

அன்னையின் அமுது

கண் விழிக்கும் காலை பொழுதினிலே! மண் மணக்கும் வாசம் காற்றினிலே! தாவி பிடிக்கும் முழு நிலவெல்லாம்! ஆவி பறக்கும் இட்லி குண்டாவிலே ! பருப்பினை கடைந்து பல்சுவை கூட்டி! பலகாய் கறிகள்இட்டு பதமுடன் சேர்த்து! நறுமண மல்லியும் நலம்தரும் கறிவேப்பிலையும்! காரமும் சாரமும் பலவகை மசாலாவும்! எண்ணையில் பொறிந்திட கடுகது கவிபாட! கடைந்து கடைந்து நாளும் சேர்த்த அமிர்தமும் தோற்றுப்போகும் நீ சமைத்த சாம்பாருக்குமுன்! அரிசியுடன் உளுந்தும் அன்புடன் கலந்து! ஆட்டு கல்லில் அழகுடன் அரைத்து! புளித்தால் பொங்கும் சுவைக்க ஏங்கும்! கல்லில் எண்ணெய் சீராக சுற்றி ! வட்ட வட்டமாக ஊற்றிட விரியும்! பிட்டு தின்றால் நாவினில் கரையும் ! நாளும் ஆசை நீசுடும் தோசை! மணம் கமழும் மல்லி சட்னி ! மதி மயங்கும் தக்காளி சட்னி! தேன் சொரியும் தேங்காய் சட்னி! வகை வகையாக வாரி கொள்ளணுமே! பலநூறு ஆயிரம் செலவழித்து பலகடைகள் தேடி உண்டாலும் அன்னை படைக்கும் அமுதுக்கு ஈடு இணை இல்லையே! அமுதூட்டும் அன்னை கரங்களில் ஆலயம்மேவும்  இறைவன் வாழ்கிறான்! 

சிவ பானம்

சிவ பானம் என்றால் கள்ளும், கஞ்சாவும், மதுவும் கருத்தில் கொள்வது தானே இன்றைய சூழ்நிலை . அவை மட்டும் போதை தரவில்லை இவ்வுலகில் . ஆணுக்கும் பெண் போதை பெண்ணுக்கு ஆண் போதை அன்பு ஒரு போதை அறிவு ஒரு போதை ஆற்றல் ஒரு போதை ஆண்மை ஒரு போதை ஆணவம் ஒரு போதை உண்மை ஒரு போதை உழைப்பு ஒரு போதை உயர்வு ஒரு போதை செல்வம் ஒரு போதை செழிப்பு ஒரு போதை பெண்மை ஒரு போதை பேரும் பெயரும் ஒரு போதை ஊன் ஒரு போதை உடல் ஒரு போதை - அதில் உற்ற இன்பம் ஒரு போதை அவரவர் வயதுக்கேற்ப ஏதாவது ஒரு விஷயம் போதை தருகிறது என்பது தான் உண்மை !!! பாதை மாறிய அனைவரும் போதைக்கு அடிமையானவர்களே!! சிவ பானம் ரகசியமதை கூறுவோம். மதுவை குடித்தால் தான் போதை மாதுவை பார்த்தால் தான் போதை - ஆனால் ஈசனை நினைத்தாலே போதை தான் கள்ளுண்ண வேண்டாம் தானே களிப்பு தரும் ஞானம் தர வல்லது இந்த பானம் தயாரிக்கும் முறைதனை கேள்….. "உடல் எனும் அடுப்பில் சுவாசம் எனும் துருத்தியால் மூலாதாரத்தில் நெருப்பை மூட்டு" "பார்வைதனை அண்ணாமலையில் இருத்தி, வாசிதனை உண்ணாமுலையில் செலுத்த, ஊசி முனையில் சிவபானம் கொட்டுதே! கா...

சிவ சொரூபம்:

சிவனுக்கு எக்கோயில்களிலும் உருவமில்லை காரணம் சாபம் என்பதில் ஞாயமில்லை உடலுக்கு உருவமுண்டு உயிருக்கு ஏதடா?? அண்டத்தில் எத்தனை உயிர்கள் - உண்டோ அத்தனையும் சிவ சொரூபமே சிறிதோ, பெரிதோ, ஒரு நாளோ, பல நூறு வருடமோ என எல்லாம் சிவ சொரூபமே. கோயில்களில் சிவனை சுயம்பு லிங்கமாக காண்பிப்பதற்கு அர்த்தம் உண்டு. அந்த சிவன் (ஜீவன்) தானாகவே தோன்றியதால் தான் சுயம்பு ஆகிறான். தானாக தோன்றியது எதுவோ, அது தானாகவே தான் அழியும். தோன்றியவனும்(பிறப்பு) அவனே அழித்தவனும்(இறப்பு) அவனே! ஈன்றெடுத்த தாயாகினும் உயிரை பெற்றாளே அன்றி படைக்கவில்லை. வளர்த்தெடுத்த தந்தையாகினும் உயிரை வளர்த்தாரே அன்றி வார்க்கவில்லை. தானகேவே தான் தோன்றியதை குறிக்கும் அடையாளமே சிவலிங்கம். சிவலிங்கம் என்றால். ஆண், பெண் குறி சேர்ப்பு என்றோ மூளையின் ஒரு பகுதியின் சுரப்பி என்றோ எண்ணுபவர்கள் கோடி இவ்வுலகில். தன் உயிரை தானே தரிசித்த ஒரு ஆன்மீக விஞ்ஞானி உருவாக்கிய குறியீடு தான் அது. ஊருக்கு செல்ல பயன்படும் வரைபடம் தான் அது. வரைபடம் ஒரு நாளும் ஊர் ஆகாது. அங்கு உறைந்திருக்கும் ஈசன் ஆகாது நட்ட கல்லும் பேச...

பயணம்

தொடங்கியது ஓர் நன்னாளில், பயணசீட்டு கொடுத்தான் சிறுபுன்னகையுடன், அதன் அர்த்தமென்னவென்றால்  என்று தொடங்கியதோ அன்றே முடியும் நாள் குறிக்கபட்டது. இந்த பயணத்தில் நீ, ரசிக்கலாம் சிரிக்கலாம் அழலாம் கோபபடலாம் ஏக்கம் கொள்ளலாம் அன்பு காட்டலாம் அறிவை வளர்க்கலாம் பிறருக்கு உதவலாம் அல்லது உபத்திரம் பண்ணலாம் இங்குள்ள எந்த பொருளையும் பயன்படுத்தலாம், அழிக்கலாம் ஆக்கலாம் காக்கலாம் சேர்க்கலாம் பிரிக்கலாம் பயணம் முடியும் முன்பே கீழே குதித்துவிடலாம் பயண காட்சிகளை கொண்டாடலாம் குதுகலிக்கலாம் இல்லை கண் மூடி கொள்ளலாம். என்று பயணம் எத்தனை துரமோ அதுவரை எது வேண்டுமானாலும் செய்யலாம் அல்லது எதுவும் செய்யாமல் இருக்கலாம். தற்காலிகமாக கொடுக்கபட்ட இருக்கைகளை தனது என்றும், பிறர் இருக்கைகளை தனதாக்க துடிக்கும் பல பேர். பயணத்திற்காக உருவாக்கி கொடுக்கபட்ட வசதிகள் அனைவருக்கும் சமமாக பங்கிடபடாமல் வலியோர் தங்கள் தேவையை பெருக்கி எளியோறை சுரண்டும் அவலம் இங்குண்டு. இருக்கை வளங்களையெல்லாம் அழித்து வண்டிகாரனை பழிக்கும் ஒரு கூட்டம். உயர்ந்தோர், தாழ்ந்தோர், கருப்பு, சிவப்பு, ஜாதி, மதம், ...

அன்னையர் தினம்

ஐயிரண்டு திங்கள் நொந்து பெற்ற உன்னையே! மையிரண்டு விழிகளில் காத்து நின்றவள் அன்னையே! தங்கமுலை கொண்டு பால் கொடுத்து, அங்கமெலாம் சிலிர்க்க ஆனந்தம் கொண்டவளே! உண்ணும் போது என்றாவது அன்னையை நினைத்ததுண்டா, உன்னை மறந்து உண்ட ஓர் நாளும் அவளுக்கிங்கில்லையே!. அன்னையே உன்னை போற்றி, ஆயிரம் பாடலிருந்து பயனென்னவோ! உன் பெருமையை மறந்த கூட்டம், கோடி தான் இந்நாட்டிலே. உன்னை போற்றி கவி எழுத பாடல் ஏதும் இல்லையே! நின்னை கைவிட்ட கூட்டம் தனை சாடும் நேரம் வந்ததே! உற்ற சொந்த உறவெலாம், கற்ற கல்வி உயர்வெலாம், பெற்ற குழந்தை பேரெலாம், மண்ணுக்கு நீ வந்த பின்னலோ!. இவ்வுலகம் வந்து சேரும் முன்னே, உற்ற உறவு உனக்கு தாயல்லோ!. மனைவி மக்கள் கூட வாழ தாயை பாரமென நினைக்கும் பாவிகாள் உன்னை பாரமென நினைத்திருந்தால் தன் உடல் நோவ உனை சுமந்திருப்பாளோ!... வேரை அறுத்துவிட்டு கிளைகளுக்கு நீர் இறைத்து என் பயன்!! பால்பட்ட மரத்தை வெட்ட நினைக்கும் மூடரே!... பால் கொடுத்து தன்னை இழந்தவள் தாயல்லோ! அன்னை ஒன்று இங்கிருக்க மறந்துவிட்டு ஆலயம் சென்று பயன் என்ன? ஆங்கே அன்னதானம், தர்ம வேள்வி செய்வதனால்...

அன்னையர் எழுவர் அகவல்

வாழ வைக்கும் அன்னையே - என் வீடு தேடி ஓடிவா! கால மெலாம் என்னையே - உன் கண் மணியில் காத்துவா! வீடு வாசல் செல்வமெலாம் - என்றும் செழித்து வாழ வரங்கள்தா! செல்வம் பதினாறும் அருளும் - என் செல்வமே வராகி வா! போக வாழ்வு இன்பம்தரும் - என் பூங்கொடியே பிராமி வா! கேட்ட தெலாம் அள்ளிதரும் - என் கோமளமே வைஷ்ணவி வா! செய்தொழில் யாவும் வெற்றிதரும் - என் செந்தேனே இந்திரானி வா! தவமும் தானமும் நித்தம்தழைக்க - என் தங்கமே மாகேஷ்வரி வா! வித்தைகள் யாவும் சித்திக்கும் - என் வித்தகியே கௌமாரி வா! ஆனந்த அமுது ஊட்டும் - என் அம்மையே சாமுண்டி வா! அன்னை உங்கள் திருவடியை - நாளும் தொழுதால் நன்மை கோடியே!... -- jithu