Skip to main content

ஏழைக் கவியின் ஏக்கம்!





தேனின் சுவையும் இனிக்கவில்லை
என்வானில் ஒளியும் நிலைக்கவில்லை - எனக்காக
அன்பு மட்டும்வாழ போதவில்லை
அனைத்திலும் விலையுண்டு பேதமில்லை - எனக்காக
கற்ற கல்வியில் பயனில்லை
அதனாலான கடனோ தீரவில்லை - எனக்காக
வறுமை நாளும் நீங்கவில்லை
வாழ்கை இன்பம் கூட்டவில்லை - எனக்காக
உணவுகள் சுவைத்து உண்டதில்லை
உடைகள் மகிழ்ந்து உடுத்தவில்லை - எனக்காக
இளமையின் தாகம் தீர்க்கவில்லை
இழிந்த நிலையும் போகவில்லை - எனக்காக
கொண்ட காதலும் ஜெயிக்கவில்லை
செய்யும் வேலையும் பிடிக்கவில்லை - எனக்காக
கனவுகள் எதுவும் நிறைவேறவில்லை
கண்களின் ஓடையோ வற்றவில்லை - எனக்காக
பூக்களில் வாசம் பூக்கவில்லை
புண்பட்ட நேசமோ மறக்கவில்லை - எனக்காக
ஓட்டத்தின் வேகம் குறையவில்லை
ஓடியதால் பயனும் ஏதுமில்லை - எனக்காக
வாழும் ஆசையோ நீங்கவில்லை
அதன்வழி தான்ஏனோ தெரியவில்லை - எனக்காக
நாள்கள் சரியாக போனதில்லை
நேரமும் நன்றாக இருந்ததில்லை - எனக்காக
இயற்கையின் பரிவோ கிடைக்கவுமில்லை
ஈட்டிய செல்வமோ நிலைக்கவுமில்லை - எனக்காக
பார்த்தவை எவையும் புரியவில்லை
பழகியவை எவையும் சரியுமில்லை - எனக்காக
தூங்கிய நாள்களோ அதிகமில்லை
ஏங்கிய நாள்களோ கணக்குகளில்லை - எனக்காக
தெய்வங்கள் பதிலும் கூறவில்லை
தெருக்களில் அலைந்தும் தீரவில்லை - எனக்காக
தன்னை அறியும் வழியுமில்லை
தன்னால் ஏதுவும் நிகழவில்லை - எனக்காக
விதியோ கருணை காட்டவுமில்லை
மதியோ பூட்டை திறக்கவுமில்லை - எனக்காக
இருப்பதில் ஏதும் பயனுமில்லை
போவதில் யாதொரு பயமுமில்லை - எனக்காக
உயிரோ விட்டெனை பிரியவில்லை
உடலோ நெருப்பினில் எரியவுமில்லை - எனக்காக
ஆதலால்,
ஆதலால்,
ஆதலால்,
கவிதை ஓன்று படைத்துவிட்டேன் - எனக்காக

--
jithu

Comments

Popular posts from this blog

சிவ சொரூபம்:

சிவனுக்கு எக்கோயில்களிலும் உருவமில்லை காரணம் சாபம் என்பதில் ஞாயமில்லை உடலுக்கு உருவமுண்டு உயிருக்கு ஏதடா?? அண்டத்தில் எத்தனை உயிர்கள் - உண்டோ அத்தனையும் சிவ சொரூபமே சிறிதோ, பெரிதோ, ஒரு நாளோ, பல நூறு வருடமோ என எல்லாம் சிவ சொரூபமே. கோயில்களில் சிவனை சுயம்பு லிங்கமாக காண்பிப்பதற்கு அர்த்தம் உண்டு. அந்த சிவன் (ஜீவன்) தானாகவே தோன்றியதால் தான் சுயம்பு ஆகிறான். தானாக தோன்றியது எதுவோ, அது தானாகவே தான் அழியும். தோன்றியவனும்(பிறப்பு) அவனே அழித்தவனும்(இறப்பு) அவனே! ஈன்றெடுத்த தாயாகினும் உயிரை பெற்றாளே அன்றி படைக்கவில்லை. வளர்த்தெடுத்த தந்தையாகினும் உயிரை வளர்த்தாரே அன்றி வார்க்கவில்லை. தானகேவே தான் தோன்றியதை குறிக்கும் அடையாளமே சிவலிங்கம். சிவலிங்கம் என்றால். ஆண், பெண் குறி சேர்ப்பு என்றோ மூளையின் ஒரு பகுதியின் சுரப்பி என்றோ எண்ணுபவர்கள் கோடி இவ்வுலகில். தன் உயிரை தானே தரிசித்த ஒரு ஆன்மீக விஞ்ஞானி உருவாக்கிய குறியீடு தான் அது. ஊருக்கு செல்ல பயன்படும் வரைபடம் தான் அது. வரைபடம் ஒரு நாளும் ஊர் ஆகாது. அங்கு உறைந்திருக்கும் ஈசன் ஆகாது நட்ட கல்லும் பேச...

பயணம்

தொடங்கியது ஓர் நன்னாளில், பயணசீட்டு கொடுத்தான் சிறுபுன்னகையுடன், அதன் அர்த்தமென்னவென்றால்  என்று தொடங்கியதோ அன்றே முடியும் நாள் குறிக்கபட்டது. இந்த பயணத்தில் நீ, ரசிக்கலாம் சிரிக்கலாம் அழலாம் கோபபடலாம் ஏக்கம் கொள்ளலாம் அன்பு காட்டலாம் அறிவை வளர்க்கலாம் பிறருக்கு உதவலாம் அல்லது உபத்திரம் பண்ணலாம் இங்குள்ள எந்த பொருளையும் பயன்படுத்தலாம், அழிக்கலாம் ஆக்கலாம் காக்கலாம் சேர்க்கலாம் பிரிக்கலாம் பயணம் முடியும் முன்பே கீழே குதித்துவிடலாம் பயண காட்சிகளை கொண்டாடலாம் குதுகலிக்கலாம் இல்லை கண் மூடி கொள்ளலாம். என்று பயணம் எத்தனை துரமோ அதுவரை எது வேண்டுமானாலும் செய்யலாம் அல்லது எதுவும் செய்யாமல் இருக்கலாம். தற்காலிகமாக கொடுக்கபட்ட இருக்கைகளை தனது என்றும், பிறர் இருக்கைகளை தனதாக்க துடிக்கும் பல பேர். பயணத்திற்காக உருவாக்கி கொடுக்கபட்ட வசதிகள் அனைவருக்கும் சமமாக பங்கிடபடாமல் வலியோர் தங்கள் தேவையை பெருக்கி எளியோறை சுரண்டும் அவலம் இங்குண்டு. இருக்கை வளங்களையெல்லாம் அழித்து வண்டிகாரனை பழிக்கும் ஒரு கூட்டம். உயர்ந்தோர், தாழ்ந்தோர், கருப்பு, சிவப்பு, ஜாதி, மதம், ...

சிவ பானம்

சிவ பானம் என்றால் கள்ளும், கஞ்சாவும், மதுவும் கருத்தில் கொள்வது தானே இன்றைய சூழ்நிலை . அவை மட்டும் போதை தரவில்லை இவ்வுலகில் . ஆணுக்கும் பெண் போதை பெண்ணுக்கு ஆண் போதை அன்பு ஒரு போதை அறிவு ஒரு போதை ஆற்றல் ஒரு போதை ஆண்மை ஒரு போதை ஆணவம் ஒரு போதை உண்மை ஒரு போதை உழைப்பு ஒரு போதை உயர்வு ஒரு போதை செல்வம் ஒரு போதை செழிப்பு ஒரு போதை பெண்மை ஒரு போதை பேரும் பெயரும் ஒரு போதை ஊன் ஒரு போதை உடல் ஒரு போதை - அதில் உற்ற இன்பம் ஒரு போதை அவரவர் வயதுக்கேற்ப ஏதாவது ஒரு விஷயம் போதை தருகிறது என்பது தான் உண்மை !!! பாதை மாறிய அனைவரும் போதைக்கு அடிமையானவர்களே!! சிவ பானம் ரகசியமதை கூறுவோம். மதுவை குடித்தால் தான் போதை மாதுவை பார்த்தால் தான் போதை - ஆனால் ஈசனை நினைத்தாலே போதை தான் கள்ளுண்ண வேண்டாம் தானே களிப்பு தரும் ஞானம் தர வல்லது இந்த பானம் தயாரிக்கும் முறைதனை கேள்….. "உடல் எனும் அடுப்பில் சுவாசம் எனும் துருத்தியால் மூலாதாரத்தில் நெருப்பை மூட்டு" "பார்வைதனை அண்ணாமலையில் இருத்தி, வாசிதனை உண்ணாமுலையில் செலுத்த, ஊசி முனையில் சிவபானம் கொட்டுதே! கா...